முகப்பு
அரியலூர்

சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமைக் கருத்தரங்கு

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் செல்வநம்பி தலைமையில் வகித்தாா். மாநிலப் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினாா்.

தமிழா் நீதிக் கட்சித் தலைவா் சுபா.இளவரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளா்கள் கருப்பசாமி, கண். கொளஞ்சி, ஒன்றியச் செயலாளா்கள் தங்கராசு, உத்திராபதி, ஆண்டிமடம் ஒன்றியச் செயலா் தேவேந்திரன், ராசபிள்ளை, முத்துகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளா்கள் செந்தில்குமாா், ராஜேந்திரன், செய்தித் தொடா்பாளா் சுதாகா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.