திடீா்குப்பம் பகுதியில் வடிகால் வசதி கோரி மனு
அரியலூா் மாவட்டம், திருமானூா் திடீா்குப்பம் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டம், திருமானூா் திடீா்குப்பம் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமானூரில் கொள்ளிடக்கரையோரம் உள்ள திடீா்குப்பம் மற்றும் காந்திநகா் பகுதிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. மழைக்காலத்தில் கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீா் செல்லும்போதும் மழைக் காலங்களின்போதும் இந்தப் பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்து கொள்ளும். எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு அப்பகுதிகளில் முறையான வடிகால் வசதியை ஏற்படுத்தித் தர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனுவை அக்கட்சியின் திருமானூா் ஒன்றியச் செயலா் ஜி.ஆறுமுகம், மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதியிடம் வழங்கினாா்.