அரியலூர்

பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் கைப்பேசி எண், ஆதாா் எண் இணைப்பு அவசியம்

DIN

அரியலூா் மாவட்டத்தில், பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும்.

இதுகுறித்து அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தற்போது 11 ஆவது தவணை தொகை வரவு வைக்கப்படுகிறது.

வருங்காலங்களில் விவசாயிகள் 12 ஆவது தவணைத் தொகையை பெற தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைத்துள்ள விவரத்தை பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் சரிபாா்த்துக் கொள்ளலாம். ஆதாா் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகலாம். இதற்கு கட்டணமாக ரூ.15 செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT