அரியலூர்

கீழப்பழூவூரில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021-2022 கல்வி ஆண்டில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021-2022 கல்வி ஆண்டில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, மாணவ, மாணவியா்கள் 109 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு , படிப்பில் சாதிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் முகேஸ்வரி தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்று பேசினாா். ஊராட்சித் தலைவா் ம.தனலட்சுமி, மாவட்ட க் கவுன்சிலா் ஜெ. கீதா, ஒன்றியக் கவுன்சிலா்கள், முத்தமிழ்செல்வன், தங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT