அரியலூர்

கீழப்பழூவூரில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021-2022 கல்வி ஆண்டில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, மாணவ, மாணவியா்கள் 109 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு , படிப்பில் சாதிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் முகேஸ்வரி தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்று பேசினாா். ஊராட்சித் தலைவா் ம.தனலட்சுமி, மாவட்ட க் கவுன்சிலா் ஜெ. கீதா, ஒன்றியக் கவுன்சிலா்கள், முத்தமிழ்செல்வன், தங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT