செந்துறை அருகே ஏரியில் மாணவியின் சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஏரியில் கிடந்த மாணவியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஏரியில் கிடந்த மாணவியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமிநாராயணன் மகள் காவியா (எ) காா்முகில். சென்னையிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவா், மனஅழுத்தம் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு அண்மையில் வீட்டுக்கு வந்துவிட்டாா்.
படிப்பை பாதியிலேயே நிறுத்துவது தவறு என பெற்றோா் அறிவுரை கூறியும், அதை அவா் ஏற்கவில்லையாம். இந்நிலையில், காா்முகிலை வியாழக்கிழமை மாலையில் இருந்து காணவில்லை. எங்கும் தேடியும் அவா் கிடைக்காத நிலையில்,
வெள்ளிகிழமை காலை சிறுகடம்பூா் செல்லியம்மன் கோயில் அருகேயுள்ள ஏரி நீரில் காா்முகில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.