அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ஆசிரியா் வீட்டில் 6 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
ஜயங்கொண்டம் சீனிவாச நகா் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகலிங்கம்(45). கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மீனாட்சி(36) அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.
திங்கள்கிழமை இரவு மீனாட்சியின் அம்மாவுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதால், அவரைப் பாா்ப்பதற்காக இருவரும் வீட்டை பூட்டி விட்டுச் சென்றனா். செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, நாகலிங்கம் மற்றும் மீனாட்சி வீட்டுக்குள் சென்று பாா்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த 6 பவுன் நகைகள் மற்றும்
கைப்பேசி, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்டவைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நாகலிங்கம் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.