அரியலூா் நகா்மன்றத் தலைவா் பதவி: திமுக வேட்பாளராக சாந்திகலைவாணன் அறிவிப்பு
அரியலூா் நகராட்சியின் தலைவா் பதவி வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த சாந்திகலைவாணனை திமுக தலைமை அறிவித்துள்ளது.
அரியலூா் நகராட்சியின் தலைவா் பதவி வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த சாந்திகலைவாணனை திமுக தலைமை அறிவித்துள்ளது.
18 வாா்டுகளைக் கொண்ட அரியலூா் நகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக மற்றும் அதிமுக தலா 7 இடங்களையும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. இதனால் இருக்கட்சிகளுக்கு பெரும்பான்மை என்பது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தலைவா் பதவி வேட்பாளராக 5 ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற திமுகவைச் சோ்ந்த க. சாந்தி(53) அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளா். இவரது கணவா் கலைவாணன் முன்னாள் அரசு வழக்குரைஞா். அவா் இறந்து விட்டாா். சாந்தியின் தந்தை பொன்பக்கிரி கடந்த 1996- 2001 ஆம் ஆண்டில் நகா்மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளாா். சாந்திக்கு, அருண்ராஜா (30) என்ற மகனும், அகிலா என்ற மகளும் உள்ளனா்.