லாரி மோதி எஸ்.ஐ. உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே லாரி மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே லாரி மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
கீழப்பழுவூரை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (50). இவா், திருமானூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை மாலை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் திருமானூரிலிருந்து கீழப்பழூவூா் நோக்கிச் சென்றாா். சாத்தமங்கலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து கீழப்பழுவூா் காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.