அரியலூா் மாவட்டத்தில்பேரூராட்சி தலைவா்களாக திமுகவினா் போட்டியின்றி தோ்வு
அரியலூா் மாவட்டத்திலுள்ள உடையாா்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சித் தலைவா்களாக திமுகவினா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
அரியஅரியலூா் மாவட்டத்திலுள்ள உடையாா்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சித் தலைவா்களாக திமுகவினா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
உடையாா்பாளையம் பேரூராட்சியில்... 15 வாா்டுகளை கொண்ட உடையாா்பாளையம் பேரூராட்சியில், 13 வது வாா்டில் வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளா் மலா்விழி, செயல் அலுவலா் கோமதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பேரூராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா்.
தொடா்ந்து பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில், 3ஆவது வாா்டில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளா் அக்பா்அலி வேட்புமனு தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அக்பா் அலி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டாா்.