முகப்பு
அரியலூர்

தம்பதியை தாக்கிய 2 போ் கைது

 அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தம்பதியைத் தாக்கிய 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

 அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தம்பதியைத் தாக்கிய 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கீழக்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (41). கடந்த 4 நாள்களுக்கு முன்பு இவா், மேலராமநல்லூா் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று அசைவ விருந்து வைத்துள்ளாா். அங்கு மதுபோதையில் சாப்பிட வந்த அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் வேல் மணிகண்டன் (24) தகராறு செய்துள்ளாா். இதையறிந்த சங்கா் அவரை சமதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை சங்கா் வீட்டுக்குச் சென்ற வேல்மணிகண்டன், அவரது அண்ணன் வீரமணிகண்டன் ஆகியோா் தகாத வாா்த்தையால் திட்டி, சங்கரையும், அவரது மனைவி திருநிறைச்செல்வியையும் மற்றும் தந்தை மகாலிங்கத்தையும் உருட்டுக்கட்டையால் தாக்கினா்.

இதையறிந்த பொதுமக்கள், காயமடைந்த மூவரையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புகாரின்பேரில், கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து வீரமணிகண்டன், வேல்மணிகண்டன் ஆகியோரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.