பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு
அரியலூா் நிா்மலா காந்தி நடுநிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் நிா்மலா காந்தி நடுநிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன் தலைமையிலான காவலா்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். மேலும், அவசரகால உதவி எண்கள் 100,1098, 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.