முகப்பு
அரியலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழிகாட்டுதல்

 அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி ஹெலன்கெல்லா் வாய்பேச இயலாதோருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி ஹெலன்கெல்லா் வாய்பேச இயலாதோருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மூ. வினோத் குமாா் கலந்து கொண்டு, துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். மையத்தின் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பிரிவு இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் ச. மணிமாறன், மத்திய, மாநில அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, பயிற்சியின் அவசியம், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வது குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

உதவியாளா் ஸ்ருதி, தனியாா் துறை பணியமா்த்தல் குறித்து விளக்கினாா். தலைமை ஆசிரியை தென்சா வரவேற்றாா். நிறைவில், அலுவலா் காயத்ரி நன்றி தெரிவித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.