அரியலூர்

அரியலூா் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில்

நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா தலைமை வகித்து, அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், முன்னேற்றங்கள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

முன்னதாக அவா், அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘நான் முதல்வன்’, மகளிா் பள்ளியில் நபாா்டு திட்ட கழிவறை கட்டுமானப் பணி, பள்ளகிருஷ்ணாபுரம் தொடக்கப் பள்ளியில் ‘எண்ணும் எழுத்தும்’, வாலாஜாநகரத்தில் நீா் ஆதாரம் உருவாக்குதல் பணி, செந்துறை சமத்துவபுரத்தில் சமுதாயக் கூடம் சீரமைப்பு பணி உள்பட பல்வேறு துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்

திட்டப் பணிகள், பயனாளிகளிடம் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி, மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.ஈஸ்வரன், கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஸ்டார்’ திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகள்!

முதல் இரண்டு கட்ட தேர்தல்களை விட 3-ஆம் கட்ட தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் விளையாட தடை; தில்லிக்கு பின்னடைவா?

நட்சத்திர விடுதியில் நபா நடேஷ்..!

3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT