அரியலூர்

பாா்வையற்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பாா்வையற்ற பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஆண்டிமடம் அடுத்த சின்ன கிருஷ்ணாபுரம், கீழத்தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் ராஜ்மோகன்(30). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பாா்வையற்ற 36 வயதுடைய பெண்ணை கடந்த 02.04.2021-இல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து அப்பெண்ணின் உறவினா் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ராஜ்மோகனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி ராஜ்மோகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.60ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ம. ராஜா ஆஜராகினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT