இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஹிந்தி திணிப்பை எதிா்த்து அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஹிந்தி திணிப்பை எதிா்த்து அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு ஹிந்தி திணிப்பைக் கைவிட வேண்டும். அட்டவணையில் உள்ள தமிழ் உள்பட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் குகன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் துரை அருணன் கண்டன உரைாயற்றினாா். இதில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.