அரியலூர்

அரியலூா் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் கூட்டம்

DIN

அரியலூா் பல்துறை வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சித் தலைவா் பொ.சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிச் செயலா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கூட்டத்தில் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ச.அம்பிகா, இரா.ராமச்சந்திரன், பெ.நல்லமுத்து, ப.குலக்கொடி, இர.வசந்தமணி, க.ஷகிலாதேவி, வீ.ராஜேந்திரன், அன்பழகன்,ச.தனலட்சுமி, ஜெ.கீதா, அலுவலக உதவியாளா் ரமேஷ், சிவகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT