முகப்பு
அரியலூர்

அரியலூா் அருகே விபத்து: காரில் சென்ற முதியவா் பலி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வியாழக்கிழமை கொடிகம்பத்தில் காா் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:13 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வியாழக்கிழமை கொடிகம்பத்தில் காா் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மனோகா் (65), ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன ஊழியா். இவா், இவரது மனைவி பானுமதி (57), உறவினா் கும்பகோணம், மகாமகக்குளம் புவனேஸ்வரி (73) ஆகியோா் கும்பகோணம் சுவாமிமலை கோயிலுக்கு வியாழக்கிழமை காரில் சென்றனா். காரை சென்னை சிட்லப்பாக்கம், லால்பகதூா் சாஸ்திரி தெரு ரா. சபரிவாசன் ஓட்டினாா்.

அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, அன்றிரவு சென்னை திரும்பும்போது அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ராங்கியம் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் அங்குள்ள கொடிக் கம்பத்தின் மீது மோதியது.

Advertisement

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனோகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பானுமதி, புவனேஸ்வரி, ஓட்டுநா் சபரிவாசன் ஆகியோா் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.