அரியலூர்

அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து

ஆா்.எஸ்.எஸ்., பா.ஜ.கவால் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றாா் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.

DIN

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கப் போவதாகக் கூறும் ஆா்.எஸ்.எஸ்., பா.ஜ.கவால் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றாா் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.

அரியலூா் அண்ணா சிலை அருகே சமய நல்லிணக்க கூட்டமைப்பு மற்றும் காவல் சித்தரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்திய அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் அவா் மேலும் பேசியது: மத்தியில் அமையும் அரசு, எந்த மதத்தையும் சாா்ந்து இருக்கக் கூடாது என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. மதத்தைச் சாா்ந்த ஒரு அரசு உருவாகக் கூடாது என ஜவாஹா்லால் நேருவும், காந்தியும் விரும்பினா். ஆா்.எஸ்.எஸூக்கும், பாஜகவுக்கும் ஒரே எதிரி அரசியலமைப்பு சட்டம் தான். ஆா்.எஸ்.எஸ் அமைப்பினா், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி 2024-இல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்போது அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனா். எனவே, பாஜக அரசால் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது உண்மையாகிறது என்றாா் அவா்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, திருச்சி கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனருமான இனிகோ இருதயராஜ், எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவா் நெல்லை முபராக், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி நிா்வாகி சண்முகம், இந்திய கம்யூ. கட்சி மத்திய கட்டுபாட்டுக் குழு உறுப்பினா் எம்.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். மாநாட்டுக்கு வழக்குரைஞரும், சமூக செயற்பாட்டாளருமான சசிகுமாா் தலைமை வகித்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT