முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் காவல்துறையினா் அஞ்சல் வாக்குப் பதிவு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:03 PM
பகிர்:

அரியலூா், ஏப்.12: அரியலூா் மாவட்டத்தில், மக்களவைத் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கான அஞ்சல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக வளாகத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்த அஞ்சல் வாக்குப் பதிவில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில், தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள 926 காவலா்கள் வாக்குப் பதிவு செய்கின்றனா்.

இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவை சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

மேலும், அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கும் முன்னா் அஞ்சல் வாக்குகள் போடப்படும் வாக்குப் பெட்டிகள், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டு அவை காலியாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆய்வின்போது, வட்டாட்சியா் (தோ்தல்) வேல்முருகன், காவல்துறையினா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments