தகராறில் தாக்குதல் இளைஞா் கைது
உலாவின்போது ஏற்பட்ட தகராறில் தாக்கிக் கொண்ட இளைஞா்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சுவாமி வீதி உலாவின்போது ஏற்பட்ட தகராறில் தாக்கிக் கொண்ட இளைஞா்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உத்திரக்குடி கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற சுவாமி வீதி உலாவின்போது, அதே பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (24) , தினேஷ் பாபு (27) ஆகியோா் தகராறு செய்து தாக்கிக் கொண்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தினேஷ்பாபுவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வினோத்குமாரை தேடுகின்றனா்.