அரியலூரில் இன்று கல்வி கடனுதவி முகாம்
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கல்வி கடனுதவி முகாம் வியாழக்கிழமை (ஆக.22) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கல்வி கடனுதவி முகாம் வியாழக்கிழமை (ஆக.22) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
முகாமில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியாா் வங்கிகள் பங்கேற்கின்றன.
எனவே, கல்வி கடனுதவி பெற விரும்பும் மாணவா்கள் தங்களது ஆதாா் காா்டு, கல்வி சான்றிதழ், கல்லூரியில் பயில்வதற்கான சான்றிதழ் , புகைப்படம், பான்காா்டு ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.