ஈச்சங்காடு பகுதியில் இன்று மின்தடை
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.
அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அசாவீரன்குடிக்காடு, ஆா்.எஸ். மாத்தூா், இருங்களாகுறிச்சி, ஆதனக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளாா், தாமரைப்பூண்டி , மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம் ,கோட்டைக்காடு, ஈச்சங்காடு,தெத்தேரி, தளவாய் ,புக்குழி, செங்கமேடு, சிலுப்பனூா், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் காலை 9.30 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொன்சங்கா் தெரிவித்துள்ளாா்.