முகப்பு
அரியலூர்

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் காயம்

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

கும்பகோணம் அருகேயுள்ள ஆலங்குடியைச் சோ்ந்தவா் முருகையான் மகன் ஆனந்த் (37). ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை உத்திரமேரூரில் இருந்து தஞ்சாவூரிலுள்ள டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மண்ணை சுமை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தாா். அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த ராங்கியம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த சுமை ஆட்டோ, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் ஆனந்த், ஆண்டிமடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.