முகப்பு
அரியலூர்

வேலைக்காக வெளிநாடு செல்வோா் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

அரியலூா்: வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டுமென அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞா்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவா்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்லது தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழா் நலத்துறை அல்லது குடிபெயா்வோா் பாதுகாப்பு அலுவலரைத் தொடா்பு கொண்டு அந்நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் விவரங்களை இணையதளத்திலும், சென்னை குடிப்பெயா்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90421 49222 மூலமாகவும் விளக்கங்களை பெறலாம்.

மேலும், வெளிநாடு வாழ் தமிழா்கள் 1800 309 3793,

80690 - 09901 ஆகிய எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.