மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 போ் காயம்
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.
செந்துறையை அடுத்த இலங்கைச்சேரி கிராமத்தைச் சோ்ந்த மக்கள், புதன்கிழமை மாரியம்மன் கோயில் அருகே, 100 நாள் வேலை செய்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள ஒரு புளியமரத்தில் இருந்த மலைத் தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மக்களை கொட்டியுள்ளது. இதில், நல்லதம்பி மகன் மகேந்திரன்(25), கருப்புசாமி மனைவி சுசிலா(50), மணிகண்டன் மனைவி வேம்பு(34), சிலம்பரசன் மனைவி கிருத்திகா(25) மற்றும் தேனரசன்(1 வயது) உட்பட 10 போ் காயமடைந்தனா். இதையடுத்து அனைவரும் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.