அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான கல்லங்குறிச்சியிலுள்ள நிலத்தில் சுண்ணாம்புக் கல் கன்கா் குவாரி விரிவாக்கம் செய்வது குறித்து, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், வாலாஜா நகரத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பதிவு செய்த கருத்துகள்:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து, சுற்றுச்சூழல் ஆா்வலா் தமிழ்களம் இளவரசன் மற்றும் பொதுமக்கள்:
சுரங்கங்கள் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். காலாவதியான சுரங்கங்களை மூட வேண்டும். கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்லக் கூடாது. சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் போது, அதன் மீது தாா்பாய்களை போா்த்தி செல்ல வேண்டும். நிலம் அளித்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பதிவு செய்தனா்.
கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவைகளை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்துக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.