திருமானூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் பேசிய சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.துரைராஜ். 
அரியலூர்

திருமானூா் பகுதியில் அரசு சாா்பில் நவீன அரிசி ஆலை தொடங்க வேண்டும்!

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் தமிழக அரசு நவீன அரிசி ஆலையை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க 7-ஆவது ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Syndication

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் தமிழக அரசு நவீன அரிசி ஆலையை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க 7-ஆவது ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமானூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 7-ஆவது ஒன்றிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருமானூரில் அரசு நவீன அரிசி ஆலை தொடங்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.4,000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 வாங்குவதை அரசே வழங்க வேண்டும். 60 வயது கடந்த அனைத்து விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை மசோதா, மின்சார திருத்த மசோதா ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, அச்சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஆா். வைத்திலிங்கம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். துரைராஜ், மாவட்டச் செயலா் ஆா். மணிவேல், மாவட்ட துணைச் செயலா் எம்.மணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT