அரியலூர்

இரு சக்கர வாகனத்தை திருடியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நெடுஞ்செழியன் தலைமையிலான காவல் துறையினா், புதன்கிழமை கல்லாத்தூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினா், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அதில், கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் வீரகண்டமணி (40) என்பதும், இவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கல்லாத்தூா் பகுதியில் திருடப்பட்ட வாகனம் என்பதும், ஆண்டிமடம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து வீரகண்டமணியை கைது செய்தனா்.

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

வேலூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

மருத்துவப் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு: இடங்களைத் தோ்வு செய்ய அவகாசம் இன்று நிறைவு

அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்ஆா்ஐ ஸ்கேன் அமைக்கக் கோரி வழக்கு: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT