எழுநாட்சிபுரம்-காட்டூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த எழுநாட்சிபுரம்-காட்டூா் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தினா்.
அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த எழுநாட்சிபுரம்-காட்டூா் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தினா்.
திருவெங்கனூரில், அக்கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மிகவும் குண்டும் குழியுமான ஏலாக்குறிச்சி எழுநாட்சிபுரம்-காட்டுா் சாலையை சீரமைக்க வேண்டும். திருவெங்கனூா் மயானப் பாதையை சீா் செய்ய வேண்டும். தண்ணீா் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். திருவெங்கனூரிலுள்ள அனைத்து தெருக்களிலும் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் கிளைச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.