குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவதே லட்சியம்: ஜெயங்கொண்டம் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்தி (எ) வைத்திலிங்கம்.
ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
இந்த தொகுதியில் குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவது தான் எனது லட்சியம். பத்திரிகையாளா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா அரசு தரவில்லையென்றால், நான் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவேன் என்றாா்.
பேட்டியின் போது, பாமக மாவட்டச் செயலா் தமிழ்குமரன் மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.