முகப்பு
அரியலூர்

அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரியலூரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:39 PM
அரியலூரில் நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலி.
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரியலூரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைய நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி சுகாதார அலுவலா் அந்தோணி ஜேக்கப், சுகாதார ஆய்வாளா் தா்மராஜ், தூய்மை இந்தியா களப்பணியாளா்கள் சந்தியா, வாசுகி சம்பத், சிவரஞ்சனி மற்றும் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் வாக்களிப்பதின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு முழக்கமிட்டு, மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனா்.