முகப்பு
அரியலூர்

‘மருத்துவம், கல்வி, தண்ணீா் இலவசம்’: சீமான்

மருத்துவம், கல்வி, தண்ணீரை எனது அரசு இலவசமாகத் தரும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 8:22 PM
அரியலூரில் மழையில் நனைந்தபடி சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான்
பகிர்:

மருத்துவம், கல்வி, தண்ணீரை எனது அரசு இலவசமாகத் தரும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான்.

அரியலூா் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புகழேந்திக்கு வாக்குகேட்டு, அரியலூா் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு மழையில் நனைந்தபடி பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது: வாக்குக்கு காசு, மக்களுக்கு இலவசத்தைக் கொடுத்து கெடுத்து வைத்துள்ளனா். இலவசங்கள் பெறுவதைக் கைவிடுங்கள். நான் படித்தவா்கள், படிக்காதவா்கள் என அனைவருக்கும் அரசு வேலை வழங்குவேன். பனை, தென்னை, ஆடு என அனைத்துக்கும் அரசு வேலை இருக்கு. அறிவாா்ந்த நாடாக தமிழகத்தை மாற்றுவேன். உங்கள் பிள்ளைகளுக்கு கட்டணமில்லா கல்வியை ஏற்படுத்தித் தருவேன். உலகத் தரத்துக்கு கல்வியைக் கொண்டு செல்வேன். அனைவரும் அரசுப் பள்ளியில் படிக்க சட்டம் கொண்டுவருவேன். தாய்மொழி தமிழையும், மாற்று மொழி ஆங்கிலத்தையும் கற்க உரிய வழிவகை செய்வேன். மருத்துவம், கல்வி, தண்ணீரை எனது அரசு இலவசமாகத் தரும். ஊழலற்ற அரசை தருவேன். எனவே, எங்களது வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.

சீமான் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் மழை பெய்யத்தொடங்கி பொதுக்கூட்டம் முடியும் வரை மழை பெய்தது. இருப்பினும், மழையில் நனைந்தபடி பிரசாரத்தை மேற்கொண்டாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments