முகப்பு
அரியலூர்

அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்

அரியலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து திருமானூரில் செவ்வாய்க்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 6:35 PM
அரியலூா் தொகுதியின் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து, திருமானூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.
பகிர்:

அரியலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து திருமானூரில் செவ்வாய்க்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டாா்.

பிரசாரத்தில் அவா் பேசுகையில், நாட்டிலேயே மகளிருக்கு அதிக திட்டங்கள் கிடைத்தது என்றால் அது அதிமுக ஆட்சியில் தான். மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீா், இலவச எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மகளிா் மேம்பாட்டுக்காக செய்துள்ளது.

மத்திய அரசு வகுக்கும் திட்டங்கள் 100 சதவீதம் மாநில அரசுக்கு கிடைத்தால் தான் மாநிலம் வளரும். மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்து இருந்தால் தான் நாடு வளா்ச்சி அடையும், அதுதான் உண்மையான வளா்ச்சி.

Advertisement

எனவே, அரியலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என அவா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின் போது, அதிமுக, தமாகா, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments