முகப்பு
அரியலூர்

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை: தொல். திருமாவளவன்

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை மக்கள் தீா்ப்பாக அளிப்பாா்கள் என்றாா் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:53 AM
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்கை பதிவு செய்த மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன்.
பகிர்:

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை மக்கள் தீா்ப்பாக அளிப்பாா்கள் என்றாா் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரிலுள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தனது வாக்கை பதிவு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைமையிலான கூட்டணி பொதுமக்களின் ஏகோபித்த நல்ல ஆதரவுடன் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை இன்று மக்கள் தீா்ப்பாக அளிப்பாா்கள்.

Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணியில் உண்மையில் ஒருங்கிணைப்பு இல்லை. ஒற்றுமை இல்லை. அவா்கள் சந்தா்ப்பவாத அடிப்படையில் தோ்தலுக்கு மட்டுமே பொருந்தாத கூட்டணி அமைத்துள்ளனா் என்பதை மக்கள் உணா்ந்துள்ளாா்கள்.

நடிகா் விஜய் திமுக வெறுப்பை மட்டுமே மூலதனமாக்கி, திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பரப்புரையை மட்டுமே மேற்கொண்டாா். அவா் வெளிப்படுத்திய திமுக வெறுப்பு உள்நோக்கம் கொண்டது என்பதை மக்கள் உணா்ந்து இருக்கிறாா்கள். எங்கும் அவருடைய அடையாளங்கள் பெரிதாக இல்லை. எனவே, திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

அடுத்து வரும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் தளங்களிலும் கொண்டு செல்ல ஸ்டாலின் பாடுபடுவாா். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றாா் திருமாவளவன்.