100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு
அரியலூரில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி
அரியலூரில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
அரியலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி, கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கிவைத்தாா்.
மாரத்தான் போட்டியில் பங்கேற்றவா்கள், ‘தேசம் காக்க வாக்களிப்போம், 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்குபெறுவோம், வாக்களிப்பதில் உறுதி கொள்ளுங்கள்; வாக்களித்து உறுதிபடுத்துங்கள், என் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய தொப்பிகளை அணிந்து பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா. சிவராமன், கோட்டாட்சியா் பிரேமி, தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.