முகப்பு
அரியலூர்

அரியலூரில் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் இன்று கடையடைப்பு

அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

Updated On : 20 மே 2026, 5:01 am IST
- பிரதிப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருணாகரன் வெளியிட்ட அறிக்கை: ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்திட வேண்டும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காத்திட வேண்டும்,.

உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திட வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாசார சீரழிவுகளையும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் உள்ள 320 மருந்து கடைகள் அனைத்தும் புதன்கிழமை காலை 6 முதல் மாலை 6 மணி வரை மூடி போராட்டம் நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement