சாலை விபத்தில் இளைஞர் சாவு
கரூரை அடுத்த குப்பக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவர் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் மதுக்கரையிலிருந்து மேலடை என்ற இடத்துக்குச் சென்றார். அப்போது,
கரூரை அடுத்த குப்பக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவர் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் மதுக்கரையிலிருந்து மேலடை என்ற இடத்துக்குச் சென்றார். அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த சைக்கிள் மீது வெங்கடேசன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு அவர் உயிரிழந்தார்.