"மதமாற்றம் தொடர்ந்தால் எதிர்காலத்தில் அபாயம் உருவாகும்'
இந்தியாவில் தொடர்ந்து மதமாற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் பெரிய அபாயத்தை உருவாக்கிவிடும் என்றார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சூர்யநாராயணராவ்.
இந்தியாவில் தொடர்ந்து மதமாற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் பெரிய அபாயத்தை உருவாக்கிவிடும் என்றார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சூர்யநாராயணராவ்.
கரூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் தமிழ்நாடு அளவிலான 21 நாள் பண்பு பயிற்சி முகாம் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:
விவேகானந்தரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தால், இந்தியாவின் புகழ், கலாசாரம், பண்பாடு, நாகரிகம் வெளிநாடுகளில் வேகமாக பரவியது. இந்தியாவில், கிராமப்புறம் மட்டுமல்லாமல் நகர்ப் புறங்களிலும்கூட மதமாற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இது எதிர்காலத்தில் பெரிய அபாயத்தை உருவாக்கி விடும் என்றார்.
பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், கரூர் மாவட்டத் தலைவர் கே. சிவசாமி, ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் குணசேகரன், முகாம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சத்யானந்த மஹாராஜ், ருத்ரானந்த மஹாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.