மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அன்னை மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
கரூர் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கல்லூரியின் 2-ஆம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி
செல்வராணி நீளம் தாண்டுதலில் முதல் பரிசையும், குண்டு எறிதலில் மாணவி நிவேதா
முதல் பரிசையும், 1,500 மற்றும் 800 மீ. ஓட்டப் பந்தயங்களில் மாணவி திவ்யா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இம்மாணவிகளை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மலையப்பசாமி, அறக்கட்டளை உறுப்பினர் பி. தங்கராசு, அறக்கட்டளை உறுப்பினர்கள், முதல்வர் முனைவர் சாருமதி, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.