கரூர்

மாவட்ட அளவிலான தடகளப் போட்டி: அன்னை கல்லூரி மாணவிகள் சாதனை

தினமணி

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அன்னை மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

கரூர் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கல்லூரியின் 2-ஆம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி

செல்வராணி நீளம் தாண்டுதலில் முதல் பரிசையும், குண்டு எறிதலில் மாணவி நிவேதா

முதல் பரிசையும், 1,500 மற்றும் 800 மீ. ஓட்டப் பந்தயங்களில் மாணவி திவ்யா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இம்மாணவிகளை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மலையப்பசாமி, அறக்கட்டளை உறுப்பினர் பி. தங்கராசு, அறக்கட்டளை உறுப்பினர்கள், முதல்வர் முனைவர் சாருமதி, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT