கரூர்

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முகாம்

DIN

அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியில் சிறுபான்மைப் பிரிவு பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான இலவச சிறப்பு முகாம் கிரசன்ட் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளபட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் சிறுபான்மைப் பிரிவினரான  முஸ்லிம், கிறிஸ்தவ பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை பெற, இணையம் மூலம் விண்ணப்பித்து அவர்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த முகாமை சென்னை கதீஜா அறக்கட்டளை மற்றும் பள்ளபட்டி ஐக்கிய நல கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. முகாமில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 15 உழியர்கள் பங்கேற்று இணையத்தில் விண்ணப்பிக்க உதவினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT