கரூர்

நாச்சியார் பட வசனம்: நடிகர் விஷாலுக்கு கடிதம்

DIN

நாச்சியார் பட வசனம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இயக்குநர் பாலாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே பிரிவு) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தயாரிப்பாளர் சங்கத்  தலைவர் நடிகர் விஷாலுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.
 நாச்சியார் பட டீஸரில் நடிகை ஜோதிகா, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தகாத வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதனால் நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குநர் பாலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே பிரிவு) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கடந்த மாதம் 27-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். இதில், நவ. 29-ஆம் தேதி முதற்கட்ட விசாரணையும், வியாழக்கிழமை (டிசம்பர் 7) இரண்டாம்  கட்ட விசாரணையும் நடைபெற்றது.  இந்த வழக்கில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை நடைபெற உள்ளது.
   இந்நிலையில், தலித் பாண்டியன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு கடிதம் ஒன்றை வியாழக்கிழமை அனுப்பினார். அதில், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நாச்சியார் படத்தில் தகாத வசனத்தை இடம் பெறச் செய்த இயக்குநர் பாலாவுக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, குறிப்பிட்ட ஆபாச வசனத்தை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT