கரூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞர் சாவு

DIN

சிந்தாமணிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த இஞ்சிகிணத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சக்திவேல் (30).  இவர் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில், கரூர் மாவட்டம், கடவூரில் வசிக்கும் தனது நண்பரை சந்தித்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
பாளையம்-மைலம்பட்டி சாலையில் குருணிகுளத்துப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது நிலைத்தடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT