கரூர்

வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

DIN

அரவக்குறிச்சி அருகே வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சின்ன அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி ஜான்சிராணி (30). இவர்கள் கோடை வெப்பத்தினால் வீட்டை திறந்து வைத்து வியாழக்கிழமை இரவு தூங்கியுள்ளனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த ஜான்சிராணியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT