கரூர்

ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவி போலீஸில் புகார்

DIN

அரவக்குறிச்சி அருகே பள்ளி மாணவியை தகாத வார்த்தையால் திட்டி,  மண்டியிட வைத்த பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி மாணவி அரவக்குறிச்சி போலீஸில் புகார் அளித்தார்.
அரவக்குறிச்சியில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் நாகம்பள்ளியைச் சேர்ந்த பெருமாள் மகள் ரூபினா (16) 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆம் தேதி பள்ளியில் சக  மாணவியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பள்ளி ஆசிரியர் தங்கவேல் ரூபினாவை அழைத்து   தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியரிடம் மாணவி இதுகுறித்து முறையிட்டார். தலைமை ஆசிரியர் மாணவியை ஒரு மணிநேரம் மண்டியிட வைத்து அனுப்பினாராம். தனது பெற்றோரிடம் ரூபினா தெரிவித்ததையடுத்து, மாணவியின் தந்தை  பெருமாள், ஆசிரியர்  தங்கவேல்  மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரவக்குறிச்சி போலீஸில் புகார் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT