கரூர்

இறந்த பெண் காவலரின் வாரிசுதாரருக்கு உதவித்தொகை

DIN

இறந்த பெண் காவலரின் வாரிசுக்கு உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரன் புதன்கிழமை வழங்கினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலர் விஜயசாந்தி கடந்த ஜூலை 9 ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
இதையடுத்து அவரது குழந்தைகள் தேவ தர்ஷன் (4), தேன் மொழி (1) ஆகியோருக்கு கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் தன்னார்வத்துடன் வழங்கிய உதவித்தொகை ரூ.1.30 லட்சத்தை விஜயசாந்தியின் தந்தை பிரபாகரனிடம் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் வழங்கினார். நிகழ்ச்சியின்போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருள்மொழிஅரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT