கரூர்

புரட்டாசி சனிக்கிழமை: சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு, கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம், கோம்புபாளையத்தில் சீனிவாசபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பூதேவி, நீலாதேவியுடன் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் காவிரியில் நீராடி புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பிறகு பூதேவி, நீலாதேவி சமேத சீனிவாசப் பெருமாளுக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நிகழ்ச்சியையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT