கரூர்

இளைஞரை மிரட்டி பைக், பணம் பறித்த இருவர் கைது

DIN

வீரராக்கியத்தில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் மற்றும் பணம் பறித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரராக்கியத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அருண்(30). இவர் வியாழக்கிழமை தனது  தோட்டத்தில் பைக்கோடு நின்றபோது அங்கு வந்த  திருச்சி தராநல்லூரைச் சேர்ந்த அன்பழகன் மகன் தர்மராஜ் (25), கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுனில் (31) ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது பைக்கை பறித்துள்ளனர். இதனால் அவர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தர்மராஜ், சுனில் ஆகியோரை பிடித்து மாயனூர் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT