கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் திங்கள்கிழமை மனிதஉரிமைகள் நாள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியர் த. அன்பழகன் உறுதிமொழியை வாசிக்க, அதை அனைத்துத் துறை அலுவலர்களும் திரும்பக் கூறி எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள், பணியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.