கரூர்

நகராட்சி, சட்டப்பணி  ஆணைக்குழு சார்பில்  தூய்மை நிகழ்ச்சி

DIN

கரூரில் நகராட்சி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தூய்மை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு கட்டட மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ப. அசோக்குமார் முன்னிலை வகித்தார். 
மாவட்ட சட்டப் பணி ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர். தங்கவேல் தலைமை வகித்து தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். மைய வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு, தூய்மைப்பணி நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் என். நாகதீபா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் எஸ். கோபாலன், குளித்தலை கிராமியம் இயக்குநர் பி. நாராயணன், வழக்குரைஞர் பாலகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் கே.கே. சொக்கலிங்கம் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT