இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் 9 பவுன் நகை பறிப்பு
வேலாயுதம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நின்றிருந்த இரு பெண்களிடம் 9 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நின்றிருந்த இரு பெண்களிடம் 9 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தளவாபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சரஸ்வதி (56). இவர், சனிக்கிழமை இரவு வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், திடீரென சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதேபோல புன்னம்சத்திரம் ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, இவரது மனைவி சரஸ்வதி (60). இவர் வீட்டின் முன்பு சனிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.